மோடிக்கு நாம யார்னு காட்டணும்… அதிரடியாகக் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி..!

 

மோடிக்கு நாம யார்னு காட்டணும்… அதிரடியாகக் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி..!

கரன்சிகளை பற்றிய கவலையே வேண்டாம். வேலையை பாருங்கள். மோடி எதிர்ப்பு அலையால் தான் அதிமுக தோற்றது என்பதை மோடிக்கு உணர்த்துவோம் எனக் கூறி இருக்கிறார்.

வேலூர் மக்களைவை தேர்தல்இல் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற வைராக்கியத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தெற்கில் ஓ.பி.எஸ் தன் மகன் ரவீந்திரநாத்தை  ஜெயிக்க வைத்து செல்வாக்கை உயர்த்தி கொண்டதுபோல  வடக்கில் ஏ.சி.சண்முகத்தை ஜெயிக்க வைத்து தனக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருக்கிறார். eps

 ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் நிற்பதால் தனக்கு வேண்டிய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்கள் பட்டாளத்தை அப்படியே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் களம் இறக்குகிறார். கரன்சிகளை பற்றிய கவலையே வேண்டாம். வேலையை பாருங்கள்.  மோடி எதிர்ப்பு அலையால் தான் அதிமுக தோற்றது என்பதை மோடிக்கு உணர்த்துவோம் எனக் கூறி இருக்கிறார். eps

இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருக்கிறாராம். இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயிப்பதால் மத்திய அரசில்  தங்கள் செல்வாக்கு  உயரும் என்று நினைக்கிறார் எடப்பாடி.