மோடிக்கு நன்றி தெரிவித்த அவரது எதிர்ப்பாளர்!

 

மோடிக்கு நன்றி தெரிவித்த அவரது எதிர்ப்பாளர்!

மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நன்றி தெரிவித்துள்ளார்

 மக்களவை தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் அபார வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மீண்டும் பிரதமராக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். தனி பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று அரியணையில் ஏறிய பிரதமருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் பிரபல இந்தி பட இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாகவும் நடித்த அன்ராக் காஷ்யப் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள், உங்களுடைய எதிர்ப்பாளனாகிய எனது மகளை பாஜக தொண்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அவரை எப்படி சமாளிப்பது என எனக்கு யோசனை சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். இன்ஸ்டாகிராமில் அவரது மகளை ஒருவர் மிரட்டுவது போன்ற பதிவையும் அவர் இணைத்திருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது. 

இந்நிலையில் மும்பை அம்போலி காவல்நிலையத்தில் அனுராக் இது குறித்து புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் அனுராக்கின் மகளை மிரட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அனுராக் மும்பை காவல்துறையினர், மகாராஷ்ட்ர முதல்வர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.