மோடிக்கு எதிராக கருப்பு கொடியா? கொந்தளித்த பொன்னார்

 

மோடிக்கு எதிராக கருப்பு கொடியா? கொந்தளித்த பொன்னார்

தமிழினத்தின் துரோகிகளாக இருப்பவர்கள் மட்டுமே பிரதமர் வரும்போது கருப்பு கொடி  காட்டுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மதுரை : தமிழினத்தின் துரோகிகளாக இருப்பவர்கள் மட்டுமே பிரதமர் வரும்போது கருப்பு கொடி  காட்டுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி நாளை  தமிழகம் வர இருக்கிறார். அவரது வருகையின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் மோடியின் வருகையின் போது அவருக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

modi

இந்நிலையில் மதுரையில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கும் விழா மேடையை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டெல்லியில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை, அனைத்துப் பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ள நிலையில் தற்போது, மதுரையில் அமைய உள்ளது. 

modi

மோடியின் வருகையின் போது அவருக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டப்படும் என்ற வைகோ அறிவிப்புக்குப் பதிலளித்த அவர், தமிழின துரோகிகள்தான் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதால் எந்த பயனும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது குறிப்பிடத்தக்கது.