மோடிக்கு அடுத்தபடியாக பிரதமராக ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகை…மேட்டர் கொஞ்சம் சீரியஸ்…

 

மோடிக்கு அடுத்தபடியாக பிரதமராக ஆசைப்படும் பிரபல தமிழ் நடிகை…மேட்டர் கொஞ்சம் சீரியஸ்…

‘நானும் என் கணவரும் மாற்றத்தை விரும்புபவர்கள். அந்த மாற்றம் இந்திய அரசியலிலும் நிகழவேண்டும் என்று நினைக்கிறேன்

‘நானும் என் கணவரும் மாற்றத்தை விரும்புபவர்கள். அந்த மாற்றம் இந்திய அரசியலிலும் நிகழவேண்டும் என்று நினைக்கிறேன். எனவே அடுத்த முறை நான் இந்திய பிரதமராகவும் என் கணவர் அமெரிக்க அதிபராக வேண்டுமென்றும் ஆசைப்படுகிறேன்’ என்று கொஞ்சம் சீரியஸாகவே பேசுகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

priyanka

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. சினிமா துறையில் தற்போது வெற்றிகரமாக வலம் வருகிறார். நடிப்பு தவிர ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை போன்ற சமூக விழிப்புணர்வு பிரசார பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

priyanka

ஆங்கில டெலிவிஷன் தொடர்களில் நடித்து ஹாலிவுட் பட உலகிலும் கால் பதித்து உள்ளார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில்தான் மேற்படி அதிர்ச்சி தகவலை அளித்திருக்கிறார்.

priyanka

அப்பேட்டியில்“எதிர்காலத்தில் நானும், எனது கணவரும் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் இந்திய பிரதமர் ஆவேன். அதே மாதிரி எனது கணவரை அமெரிக்க அதிபராக பார்க்க ஆசைப்படுகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இதுவரை நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். ஆனால் இப்போது ஆசை வந்து இருக்கிறது. அரசியலில் நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. திடமாக எண்ணினால் எதுவுமே அசாத்தியம் இல்லை என்பது எனது கருத்து. எனது கணவர் நிக் ஜோனஸ் கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த தலைவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்கிறார் வருங்கால பிரதமர்.

இந்த பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டதை இன்றைய பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துகொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.