மைக் முன்பு பயந்து நடுங்கிய நடிகை அமலா பால்: காரணம் தெரியுமா?

 

மைக் முன்பு பயந்து  நடுங்கிய நடிகை அமலா பால்: காரணம் தெரியுமா?

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.

சென்னை: நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.

நடிகை அமலாபால் ஹீரோயினாக நடித்திருந்த ராட்சசன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி நடித்து வருகிறார். 

இதையடுத்து ‘ஆடை’ மற்றும் ‘அதோ அந்த பறவை போல’ எனப் பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். இதில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இதன் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.

இதனைத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள  அமலா பால், ‘எக்ஸாம் ஃபீவர் போல இது டப்பிங் ஃபீவர். மைக் முன்பு நின்று ஒவ்வொரு உணர்வுப்பூர்வமான தருணங்களையும் கொஞ்சம் கூட மாறாமல் பேசி முடிப்பதற்குள், நடுக்கம், ஸ்ட்ரெஸ், பிம்பிள் எல்லாமே வந்து விடுகிறது. ஆனால் பயத்தை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ளாத வாழ்க்கை என்ன வாழ்க்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.