மே31 ஆம் தேதி வரை மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு!

 

மே31 ஆம் தேதி வரை மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு!

மேலும் 16 லட்சத்து 79 ஆயிரத்து 428  பேர்  குணமாகியுள்ளனர். இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை உலகம் முழுவதும் 46  லட்சத்து 26 ஆயிரத்து 632 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3லட்சத்து 11ஆயிரத்து 363  பேர்  பலியாகி  உள்ளனர் . மேலும் 16 லட்சத்து 79 ஆயிரத்து 428  பேர்  குணமாகியுள்ளனர். இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ff

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை  90,927 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 34,109 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,872  ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

rff

குறிப்பாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 7,088ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,135ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில்  மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் மகாராஷ்டிராவில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.