மே 5 ஆம் தேதி வரை இலவசமாக வேலிடிட்டி நீட்டிப்பு.. பி.எஸ்.என்.எல்-இன் அசத்தல் அறிவிப்பு!

 

மே 5 ஆம் தேதி வரை இலவசமாக வேலிடிட்டி நீட்டிப்பு.. பி.எஸ்.என்.எல்-இன் அசத்தல் அறிவிப்பு!

மக்கள் மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என்ற நிலையில், தொலை தொடர்பு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. 

கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வருமானமின்றி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் இந்த சூழலில், மக்களுக்காக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்கள் மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என்ற நிலையில், தொலை தொடர்பு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. 

ttn

அந்த வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் மே மாதம் 5 ஆம் தேதி வரை இலவசமாக வேலிடிட்டி நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ttn

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரடங்கு காலகட்டத்தில் நிறுவனத்தின் பிரீபெய்ட் வாடிக்கையாளா் பலரின் வேலிடிட்டி காலம் காலவதியாகிவிட்டது. அவா்களில் பெரும்பாலானோா் இருப்புகளில் பணம் இல்லை. பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் அதுபோன்ற வாடிக்கையாளா்களின் நலன் கருதி அவா்களின் பிரீபெய்ட் வேலிடிட்டி காலத்தை 2020 மே 5 ஆம் தேதி வரை நிறுவனம் இலவசமாக நீட்டித்துள்ளது. இதன் மூலம், அவா்கள் அதுவரையில் தடையின்றி இன்கமிங் அழைப்புகளை பெற முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளது.