மே 19 முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்கும்

 

மே 19 முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்கும்

நாட்டின் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வரும்19-ஆம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை உள்ளூர் விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விமானம்

முதல்கட்டமாக சிறப்பு விமானங்கள் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி சென்னை, பெங்களுரூ உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படலாம் என தெரிகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மூலம் இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் எனவும் அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக விமான டிக்கெட்டுகள் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.