மேலூர் நரசிங்கம்பட்டியில் மன்பிடி வினோத திருவிழா

 

மேலூர்  நரசிங்கம்பட்டியில் மன்பிடி வினோத திருவிழா

திருக்கார்த்திகை தீப விழாவினை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் வினோத திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலுார்: 

மேலுார் அருகே உள்ள நரசிங்கம்பட்டியில் திருக்கார்த்திகை தீப விழாவினை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் வினோத திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

manpidi

நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவார கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்பிடித்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம் . 

அதே போல் இந்தாண்டிற்கான கார்த்திகை தீப விழா நேற்று கொண்டாடப்பட்டது . இந்த மன்பிடி விழாவினை ஆண்டுதோறும் இந்த கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடி வருகின்றனர் .

manpidi

மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி வாழவும் வேண்டி நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன்புள்ள ஓடையில் புனித நீராடினர்.

பின் அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபட்டனர். இவ்வாறு ஆண்டுதோறும் பக்தர்கள் போட்ட மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது.

இம்மண் மலையை மூன்று முறை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி வந்து முடிகாணிக்கையும் செலுத்தினர்.