மேலாடையை கழற்று இல்லையெனில் வெளியே போ; ஹைதராபாத் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

 

மேலாடையை கழற்று இல்லையெனில் வெளியே போ; ஹைதராபாத் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

இந்த பள்ளியில் நாடக கலையை கற்றுக் கொள்வதற்காக சென்ற மாணவி நாள்தோறும் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை சென்று வந்துள்ளார்

ஹைதராபாத்: நாடக பள்ளியின் ஆசிரியர் மாணவிகளை மேலாடையை கழற்றுமாறு கூறியதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் பிரபல நாடக கலைஞர் வினய் வர்மா என்பவர், சுற்றத்தார் நாடக பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் நாடக கலையை கற்றுக் கொள்வதற்காக சென்ற மாணவி நாள்தோறும் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நாடக பள்ளியை நடத்தி வந்த வினய் வர்மா, கதவு மற்றும் ஜன்னல்களை பூட்டி விட்டு அனைத்து மாணவ/மாணவிகளும் தங்களது மேலாடைகளை கழற்றி விட்டு வரிசையாக நிற்கும்படி கூறியுள்ளார்.

rape

மாணவர்கள் அனைவரும் தங்களது மேலாடைகளை கழற்றி விட்டு வரிசையாக நின்றுள்ளனர். அதேபோல், மாணவி ஒருவரும் தனது மேலாடையை கழற்றியுள்ளார். ஆனால், இதனை கேட்டு மற்ற மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அதேசமயம், மேலாடையை கழற்ற முடியாது என்று கூறிய இந்த மாணவியை வெளியே போ என வினை வர்மா கூறியுள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து வெளியேறிய அந்த மாணவி, பெண்களின் பாதுகாப்புக்காக தெலங்கானா காவல்துறை ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் ‘ஷீ டீம்’ என்ற தனிப்பிரிவில் இது தொடர்பான புகாரை அளித்துள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் படி, நாராயனகுடா காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்க சென்ற அந்த மாணவி மதியம் 1 மணியில் இருந்து இரவு 8 மணி வரை காக்க வைக்கப்பட்டு புகாரை பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். புகாரின் பேரில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

hyderabad acting

இதுகுறித்து வினய் வர்மா கூறுகையில், அந்த மாணவிக்கு இங்கு வருவது பிடிக்கவில்லை. அவரது தந்தையின் விருப்பத்திற்காகவே இங்கு சேர்ந்த அவர் முதல் நாளில் இருந்தே எதாவது புகார் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். மேலாடையை தான் கழற்ற கூறினேன். நிர்வாணமாக இருக்க சொல்லவில்லை. மேலாடையை கழற்றுவது படிப்பின் ஒரு பகுதி. அதன் மூலம் உடலை எப்படி கருவியாக பயன்படுத்துவது என்பது கற்றுத் தரப்படும் என விளக்கமளித்துள்ளார்.

இதையும் வாசிங்க

முன்னாள் காதலிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர் கைது!