மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. திருச்சி, பெரம்பலூர், மதுரை, கடலூர், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கர், கோவை மாவட்டம் சின்கோனா, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சித்தார், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 4 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது தவிர ஆற்காடு, சாத்தூர், கன்னியாகுமரி சிவலோகம், வால்பாறை, துவாக்குடி உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழை பொழிந்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஓரிரு இடங்களில் லேசமான மழை பெய்யலாம். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கலாம் என்று கூறியுள்ளது.