மேற்கு வங்காளத்தில் சூனிய முயற்சியில் 2 குழந்தைகள் சாவு – மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

 

மேற்கு வங்காளத்தில் சூனிய முயற்சியில் 2 குழந்தைகள் சாவு – மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்காளத்தில் சூனிய முயற்சியில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

மால்டா: மேற்கு வங்காளத்தில் சூனிய முயற்சியில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள கடம்டலி என்ற பகுதியில் சூனிய பயிற்சி செய்ததால் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் 2 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தினசரி கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை வேளையில் நான்கு சிறுவர், சிறுமிகள் அருகிலுள்ள காட்டிற்கு விளையாட சென்றனர். அப்போது சூனிய பயிற்சியில் அவர்களை ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

ttn

இதையடுத்து வீடு திரும்பிய அவர்கள் மயக்கமடைந்து விழுந்தனர். காட்டில் நடந்த சூனிய முயற்சியின்போது விஷமுடைய பழங்களை அவர்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ அந்த கிராமத்திற்கு சென்று விசாரித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளையும் அவர் பார்வையிட்டார். மேலும் கடம்டலி கிராமத்திற்கு மருத்துவக் குழுவும் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.