மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

திருவனந்தபுரம்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவந்தனபுரத்தில் இன்று நடைபெற்றது.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 31-வது ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல்-அவுட் ஆனது.

அதன்பின், 105 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது இந்திய அணி. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா 63 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிகர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் வெளியேறியதும் ரோஹித்துடன் கைகோர்த்த விராட் கோலி 33 ரன்களை அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.