மேரி கோமிற்கு மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் வாழ்த்து
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்ற மேரி கோமிற்கு மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
சென்னை: உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்ற மேரி கோமிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் ஒகோட்டோவை வீழ்த்தி மேரி கோம் 6-வது முறையாக தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக பதக்கங்களை குவித்த வீராங்கனை என்ற பெருமையையும் மேரி கோம் பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Many congratulations to @MangteC for her 6th Women’s World Boxing title.
An icon and the only woman boxer to have won 6 world titles, she is a real inspiration for women in India.#MaryKom pic.twitter.com/PjVtJrlyZC
— M.K.Stalin (@mkstalin) November 24, 2018
அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்ற மேரி கோமிற்கு எனது வாழ்த்துக்கள். ஆறு முறை பட்டம் வென்ற ஒரே பெண் குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம், இந்திய பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், உத்வேகமாகவும் இருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.
உலக மகளிர் குத்து சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை மேரிகோம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 24, 2018
அதேபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக மகளிர் குத்து சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை மேரிகோம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.