மேயர், ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலை சிசிடிவி காட்சி பதிவு செய்ய திமுக முறையீடு !

 

மேயர், ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலை சிசிடிவி காட்சி பதிவு செய்ய திமுக முறையீடு !

மேயர், ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உள்ளாட்சி தலைவர், கிராம உள்ளாட்சி உறுப்பினர், ஒன்றிய உள்ளாட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு இரண்டு கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி தொடங்கி 3 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனிடையே வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக அளித்த மனுவை ஏற்று, வாக்கு எண்ணிக்கையைப் பதிவு செய்யும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி, வாக்கு எண்ணிக்கைகளும் பதிவு செய்யப்பட்டன. 

ttn

கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக மேயர், ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த சட்டம் இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மறைமுக தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக மறைமுக தேர்தலை சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அதற்கு நீதிமன்றம் மனுவாகத் தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.