மேட்ரிமோனியல் பரிதாபங்கள்: பெண் பார்க்க போன இடத்தில் நகை, பணம் திருடிய பெண்!

 

மேட்ரிமோனியல் பரிதாபங்கள்: பெண் பார்க்க போன இடத்தில் நகை, பணம் திருடிய பெண்!

பெண் பார்க்க போனவரிடம் இருந்து செல்போன் , பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பெண் பார்க்க போனவரிடம் இருந்து செல்போன் , பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் காளிசரண். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் திருமணத்துக்காக பெண் பார்த்து வந்துள்ளார். இதற்காக இணையதளத்திலும் அவர் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு கடந்த திங்களன்று அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் தன் பெயர் பிரியா ஐயர். பெங்களூரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் வேறு இடத்திற்குச் சந்திப்பை மாற்றியுள்ளார்.

ஆனால் அங்கும் சந்திக்காமல் பொன்னம்மாள் தெருவில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் சந்திக்கலாம் என்று இடத்தை மாற்றித் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அங்குச் சென்ற காளிசரனிடம் அந்த பெண் பிரியா என்று அறிமுகமாகியுள்ளார்.  உடனிருந்த 3 ஆண்களை உறவினர்கள் என்று கூறியுள்ளார்.

திடீரென்று கத்தியை எடுத்து மிரட்டிய அந்தக் கும்பல் காளிசரணின் செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த தங்கச்செயின்  ஏடிஎம் கார்டு  ஆகியவற்றைப் பிடுங்கி கொண்டு தப்பியுள்ளனர்.  இது குறித்து காளிசரண், வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றியவர்கள் தோற்றத்தில் வட இந்தியர்கள் போல இருந்ததாகவும் அவர் அடையாளம் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.