“மேக்அப்” போல கலையும் மண வாழ்க்கை – கடைசியில் நடிகை ஸ்வேதா பாசுவும் விவாகரத்து –  கணவரோடு நண்பராகத்தான் இருக்க முடியுமாம்

 

“மேக்அப்” போல கலையும் மண வாழ்க்கை – கடைசியில் நடிகை ஸ்வேதா பாசுவும் விவாகரத்து –  கணவரோடு நண்பராகத்தான் இருக்க முடியுமாம்

பிரபல நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் தனது  முதல் திருமண ஆண்டுக்கு சில நாட்களுக்கு முன்பு கணவர் ரோஹித் மிட்டலை  பிரிவதாக அறிவித்தபோது இது பலருக்கு  அதிர்ச்சியாக இருந்தது. அவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , “அனைவருக்கும் வணக்கம், ரோஹித் மிட்டலும்  நானும் பரஸ்பரம்  பிரிந்து  எங்கள் திருமணபந்தத்தை முடிக்க முடிவு செய்துள்ளோம்.

திருமணமாகி சுமார் ஒரு வருடம் கழித்து ரோஹித் மிட்டல் உடன் பிரிவதாக  அறிவித்த பின்னர், ஸ்வேதா பாசு பிரசாத் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது  குறித்து மனம் திறந்திருக்கிறார். 

பிரபல நடிகை ஸ்வேதா பாசு பிரசாத்துக்கு   திருமணம்  ஆகி  சில ஆண்டுகளே  ஆன நிலையில்  .தனது கணவர் ரோஹித் மிட்டலை  பிரிவதாக நாட்களுக்கு முன்பு அறிவித்தபோது  பலருக்கு  அதிர்ச்சியாக இருந்தது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , “அனைவருக்கும் வணக்கம், ரோஹித் மிட்டலும்  நானும் பரஸ்பரம்  பிரிந்து எங்கள் திருமணபந்தத்தை முறித்துக்கொள்வதென்று  முடிவு செய்துள்ளோம். பல மாதங்கள்  சிந்தித்த பிறகு ,  ஒருவரைஒருவர் பிரியும்  இந்த முடிவுக்கு வந்தோம்”. தனியாக இருப்பதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது.  ஈடுசெய்ய முடியாத உங்கள் நினைவுகளுக்கு நன்றி ரோஹித் . உங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை அமைய வாழ்த்துகள். ” என்று தெரிவித்திருந்தார்.

நடிகை ஸ்வேதா பாசு பிரசாத்

இது  குறித்து ஸ்வேதாவிடம் கேட்கப்பட்டபோது,  அவர், “ஆம், நாங்கள் சட்டரீதியாக  பிரிந்துவிட  மனு தாக்கல் செய்துள்ளோம். ரோஹித்தும் நானும் நல்ல  நண்பர்கள் . அவர் எப்போதும் எனது திரையுலக  வாழ்க்கைக்கு ரொம்பவே உறுதுணையாக இருந்திருகிறார், நான் அவரது தீவிர ரசிகை , அவர் ஒரு அற்புதமான திரைப்படத் தயாரிப்பாளர், எங்களுக்கு கடந்த ஐந்து வருடங்களாக மிகவும் அன்பான, ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்தோம் . சில காரணங்களால்  எ ங்கள் திருமணம்  வாழ்க்கை  முடிவுக்கு வந்துவிட்டது , அவ்வளவுதான். “என்றார் 

மீண்டும் திருமணம் பற்றி   வினவப்பட்டபோது, ஸ்வேதா தொடர்ந்து கூறினார், “நிச்சயமாக நான் மீண்டும் திருமணம் செய்வேன்.  ஆனால் இப்போது எனது ஒரே கவனம் எனது தொழில் மற்றும் எனது வேலைதான்.”

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shweta Basu Prasad (@shwetabasuprasad11) on