மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 

மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது

புதுதில்லி: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணைகள் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இந்த அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.