மேகதாது விவகாரம்; புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்

 

மேகதாது விவகாரம்; புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்

மேகதாது விவகாரம் தொடர்பாக  புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 14-ம் தேதி கூட இருக்கிறது. 

புதுச்சேரி: மேகதாது விவகாரம் தொடர்பாக  புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 14-ம் தேதி கூட இருக்கிறது. 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் நேற்று மாலை தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் மேகதாது அணை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் வரும் 14-ம் தேதி கூட இருக்கிறது. அக்கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.