மேகதாது விவகாரத்தில் பேச்சு என்பதெல்லாம் ஏமாற்று வேலை: துரைமுருகன் அதிரடி

 

மேகதாது விவகாரத்தில் பேச்சு என்பதெல்லாம் ஏமாற்று வேலை: துரைமுருகன் அதிரடி

மேகதாது விவகாரத்தில் பேசினால் பிரச்னை தீரும் என்பது ஏமாற்று வேலை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை: மேகதாது விவகாரத்தில் பேசினால் பிரச்னை தீரும் என்பது ஏமாற்று வேலை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது கர்நாடக மக்களும், தமிழக மக்களும் எதிரிகள் அல்ல. இரு மாநில மக்களும் சகோதர சகோதரிகளே. நான் ஏற்கனவே தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக அரசையும் கேட்டுக் கொண்டுள்ளேன். 

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் நிரந்தர தீர்வை எட்ட இயலாது. இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும். இயற்கை ஒத்துழைக்காததால் மழை இல்லாத காரணத்தினால் மட்டுமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அனுப்ப முடியாமல் உள்ளது. என பேசினார்.

இந்நிலையில் குமாரசாமி கருத்து குறித்து துரைமுருகன் பேசுகையில், மேகதாது விவகாரத்தில் பேசினால் பிரச்னை தீரும் என்பது ஏமாற்று வேலை.பேசி பேசிதான் காவிரி விவகாரத்தில் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்றார்.