மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசு : கடிதம் எழுதும் இபிஎஸ்; எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின்!?

 

மேகதாது  அணை கட்ட தீவிரம் காட்டும்  கர்நாடக அரசு : கடிதம் எழுதும் இபிஎஸ்; எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின்!?

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

சென்னை:  மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

megathadhu

கர்நாடக மாநில மைசூர் – காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி தலைமைப் பொறியாளர் கடந்த 20ஆம் தேதி  மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மேகதாது அணைக்கட்ட  அனுமதி அளிக்க வேண்டும். மேகதாதுவால் 400 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதனால் குடிநீர் மற்றும் மின்சார தேவைக்கு மேகதாது அணை கட்டுவது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இதுகுறித்து பலமுறை அனுமதிகேட்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக  இதுகுறித்து வலியுறுத்த  டெல்லி சென்றிருந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி , மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளார்.

palanisamy

இந்நிலையில்  முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக்கூடாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானது என்றும் அதனால் இதற்கு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். 

stalin

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் முக. ஸ்டாலின், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு  மறைமுகமாக உதவி வருகிறது. அதனால் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி மேகதாதுவில் அணைகட்ட தடை உத்தரவை பெறவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.