மேகதாதுவில் செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்கமாட்டார்: ஆர்.பி உதயகுமார் உறுதி

 

மேகதாதுவில் செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்கமாட்டார்: ஆர்.பி உதயகுமார்  உறுதி

மேகதாதுவில் கர்நாடக அரசு ஒரு செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் பழனிசாமி அனுமதிக்கமாட்டார் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

விருதுநகர்: மேகதாதுவில் கர்நாடக அரசு ஒரு செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் பழனிசாமி அனுமதிக்கமாட்டார் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தி வழக்கு தொடரப்பட்டது. மேலும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விவகாரம் குறித்து மிக நன்றாக தெரியும். அவரும் ஒரு விவசாயி. அதனால், விவசாயிகளில் வாழ்க்கையில் ஒளியேற்றுகிற வகையில் காவிரி நீரை பெற்றுத்தருவதில் முதல்வர் வெற்றி பெற்றார்.

அதேபோன்று, மேகேதாட்டு அணை கட்டாமல் தடுப்பதிலே நிச்சயமாக வெற்றி பெறுவார். மேகேதாட்டு அணை கட்ட விட மாட்டார். அதில் ஒரு செங்கலைக் கூட வைப்பதற்கு அனுமதிக்க மாட்டார் என்றார்.