மெழுகுவர்த்தி ஏற்றி கொரோனா இருளை அகற்றினார் ரஜினிகாந்த்!

 

மெழுகுவர்த்தி ஏற்றி கொரோனா இருளை அகற்றினார் ரஜினிகாந்த்!

பிரதமர் மோடி “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி

பிரதமர் மோடி “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

ரஜினிகாந்த்

அதன்படி நடிகர் ரஜினிகாந்த், கொரோனா இருளை அகற்ற அவர் வீட்டின் வெளியில் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தினார்.சென்னை மாநகரம் மக்கள் தீபத்தில் ஒளிர்ந்து வருகிறது. பட்டாசு வெடித்தும், வானவெடிகளை வெடித்தும் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்- உம் அவரவர் இல்லங்களில் விளக்கை ஏற்றினர்