மெல்ல ரீவைண்ட் ஆகும் மீ டூ புகார்!

 

மெல்ல ரீவைண்ட் ஆகும் மீ டூ புகார்!

அனு மாலிக் மீது புகார் கொடுக்கப்பட்டபோது வந்த பத்ரிகை செய்திகளை வரிசையாக அவருக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார். அதெப்புடி உங்க மேல தப்பே இல்லாதமாதிரி நடிக்க முடிகிறது என பதில் சொல்ல முடியா கேள்விகள் வேறு. இதுவரை அனு மாலிக் ரிப்ளை செய்யவில்லை.

சிலபல மாதங்களுக்கு முன்பு மீ டூ புகார்கள் ஹாலிவுட்டில் ஆரம்பித்து, பாலிவுட்டில் நிலைகொண்டு, கோலிவுட்டில் கரையேறியது ஞாபகம் இருக்கிறதா? ’அட அவன்தானே’வில் அசால்ட்டாய் ஆரம்பித்து, ’அவரா, அவருமா’ என ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்விதம் ஒரு காட்டுகாட்டிவிட்டு தற்போது ஓய்வில் இருக்கிறது மேற்படி புகார்கள். நிவாரண பணிகள் எல்லாம் நடந்துமுடிந்து ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பிகொண்டிருக்கும்போது, புதிதாக ஒரு சின்ன சலசலப்பு. புகாரில் சிக்கிய அனு மாலிக் “எந்த காரணமுமே இல்லாமல் இத்தனை மாதங்கள் எனக்கு வேலை இல்லாமல் போய்விட்டது” என அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு ட்வீட் ஒன்றை தட்டிவிட்டார்.

Sona Mohapatra Anu Malik

அனு மாலிக் யாருன்னா, இந்தி சோனி டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர். நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான சோனா மோஹபத்ராதான் அனு மாலிக் மேல் மீ டூ புகார் அளித்தவர். அனு மாலிக்கின் ட்வீட்டை கண்டவர் பொங்கியெழுந்துவிட்டார். ”என்னது காரணம் இல்லாமலா? உங்களுக்கு மறந்திருக்கும் நான் ஞாபகப்படுத்துகிறேன்” என்று சொல்லி, அனு மாலிக் மீது புகார் கொடுக்கப்பட்டபோது வந்த பத்ரிகை செய்திகளை வரிசையாக அவருக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார். அதெப்புடி உங்க மேல தப்பே இல்லாதமாதிரி நடிக்க முடிகிறது என பதில் சொல்ல முடியா கேள்விகள் வேறு. இதுவரை அனு மாலிக் ரிப்ளை செய்யவில்லை. ஏன்யா அதான் எல்லாரும் மறந்துட்டு அமைதியா இருக்காங்கல்ல, வந்தோமா பந்தியில உக்கார்ந்து பக்கது இலைக்கு பாயாசம் கேட்டோமான்னு இல்லாம, வாயைவிட்டு இப்பப்பாரு அந்தப் பொண்ணு கேக்குற கேள்விய!