மெல்ல மெல்ல குறையும் ரொக்க வர்த்தகம்! கடைகளில் டெபிட் கார்டு ஸ்வைப் அதிகரிப்பு…

 

மெல்ல மெல்ல குறையும் ரொக்க வர்த்தகம்! கடைகளில் டெபிட் கார்டு ஸ்வைப் அதிகரிப்பு…

வங்கி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் டெபிட் கார்டை ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

டெபிட் கார்டை ஏ.டி.எம். மிஷினில் மட்டுமே பயன்படுத்தி வந்த நம்மவர்கள் தற்போது சிறுகடைகளில் பொருட்கள் வாங்கவும் டெபிட் கார்டை யூஸ் பண்ணுவது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.

card

வங்கி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் டெபிட் கார்டை ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பொருட்கள் வாங்கவும் டெபிட் கார்டை யூஸ் பண்ணுவது அதிகரித்து விட்டது. கடைகளில் உள்ள ஸ்வைப் மிஷின்களில் டெபிட் கார்ட் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது தற்போது அதிகரித்து வருகிறது.

rbi

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையைபடி, கடந்த ஏப்ரல் மாதத்தில் டெபிட் கார்டு வாயிலாக 80 கோடி பண பரிவர்த்தனைகள நடைபெற்றுள்ளது. மொத்தம் ரூ.2.84 லட்சம் கோடிக்கு அந்த மாதத்தில் டெபிட் கார்ட் வாயிலாக பரிவர்த்தனை நடந்தது. மொத்த டெபிட் கார்ட் பரிவர்த்தனையில் ஏ.டி.எம். பங்கு என்று பார்த்தால் 66 சதவீதம். பாயிண்ட் ஆப் சேல்ஸ் எந்திரங்கள் (ஸ்வைப் மிஷின்கள்) பங்கு 34 சதவீதமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இது 31.4 சதவீதமாக இருந்தது. ஆக, பொதுமக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை இது வெளிப்படுத்துவதாக உள்ளது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வரும் வேளையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை மத்திய அரசுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும்.