மெர்சல் பட தயாரிப்பாளர் மீது சம்பள பாக்கி புகார்! சிக்கலில் விஜய், அட்லீ

 

மெர்சல் பட தயாரிப்பாளர் மீது சம்பள பாக்கி புகார்! சிக்கலில் விஜய், அட்லீ

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் பணியாற்றிய கனடாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ராமன் சர்மா படத்தயாரிப்பு நிறுவனம் மீது சம்பள பாக்கி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் பணியாற்றிய கனடாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் ராமன் சர்மா படத்தயாரிப்பு நிறுவனம் மீது சம்பள பாக்கி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், “ மெர்சல் படத்திற்காக விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த தனக்கு தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனக்கு இன்னும் ரூ.4 லட்சம் சம்பள பாக்கி வைத்திருக்கிறது. பலமுறை அந்த பணத்தை கேட்டும் தயாரிப்பு தரப்பில் இருந்து பதில் வராததால் கனடாவில் இருந்து சென்னைக்கு வந்து வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய தயாரானேன். 

com

சென்னை வந்திருந்தபோது ‘பிகில்’ படப்பிடிப்பில் இருந்த விஜய், அட்லீ ஆகியோர்களை சந்தித்தேன், ஆனால் தனது சம்பள பாக்கி குறித்து பேசவில்லை. மேலும் மெர்சல் படத்தில் பணிபுரிந்த ஒருசில கலைஞர்களை தான் சந்தித்தபோது அவர்களுக்கும் சம்பள பாக்கி இருப்பதாக என்னிடம் கூறினர்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கூறுவதை தான் நம்பவில்லை என்றும் சமீபத்தில் கூட ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மிகப்பெரிய ஷோரூமில் பர்சேஸ் செய்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார்” என தெரிவித்துள்ளார்.