மெர்சல் படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணம்: நடிகை ஜோதிகா ஓபன் டாக்!

 

மெர்சல் படத்தில் நடிக்காததற்கு இது தான் காரணம்: நடிகை ஜோதிகா ஓபன் டாக்!

நடிகை ஜோதிகா மெர்சல் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று முதல் முறையாகக் கூறியுள்ளார். 

சென்னை: நடிகை ஜோதிகா மெர்சல் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று முதல் முறையாகக் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று அனைத்தும் ஹீரோயினுக்கு ஆசை உண்டு. அது மட்டுமில்லாமல் இவர் படத்தில் நடித்தால் கண்டிப்பாகப் பிரபலமடையலாம் என்பதற்காகவே பல கதாநாயகிகள் நீ, நான் என்று போட்டிப் போடுகின்றனர். 

அப்படி இருக்கும் சூழலில் இவருடன் மெர்சல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஜோதிகா மறுத்துள்ளார். இதனால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். தற்போது இவர் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது இவரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

jo

அதற்கு ஜோதிகா கூறியதாவது, ‘ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்திலிருந்து விலகினேன். மேலும் கிரியேட்டிவ் difference மட்டும் தான் காரணம்’ என்று கூறியுள்ளார். ஆனால் அவர் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துச் சிறந்த நடிகை என்ற விருதை பிலிம்ஃபேர் நிகழ்ச்சியில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.