மெட்ரோ இ-பைக் சேவை: நிமிடத்திற்கு 1 ரூபாய் கொடுத்து ஒருநாள் முழுக்க ஊரை சுற்றலாம்!

 

மெட்ரோ இ-பைக் சேவை: நிமிடத்திற்கு 1 ரூபாய் கொடுத்து ஒருநாள் முழுக்க ஊரை சுற்றலாம்!

மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கூட்ட நெரிசல் இல்லாத அதிவிரைவில் செல்லும் இந்த பயணம் பலரையும் கவர்ந்துள்ளது.

சென்னையில் 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் ஃப்ளை (FLYY) என்ற இ- பைக்  பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கூட்ட நெரிசல் இல்லாத அதிவிரைவில் செல்லும் இந்த பயணம் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான  பல புதிய திட்டங்களையும் மெட்ரோ அறிமுகப்படுத்தி வருகிறது.  அந்த வகையில்கிண்டி, ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை ஆகிய நான்கு  மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் ஃப்ளை (FLYY) என்ற இருசக்கர வாகனங்கள் மக்கள்  பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 


 

5 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்துவிட்டு ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்ற முறையில் ஒருநாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நாம் எடுத்து செல்லலாம். சாவி இல்லாத இந்த இ-பைக்கை , மொபைல் செயலி மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளலாம். வாகனத்தை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ள சூழலில், நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பயன்பாட்டை மக்கள் உபயோகித்து கொள்ளலாம். 

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஃப்ளை (FLYY) செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கும் விவரங்களை பதிவிட்டு வாகனத்தின் க்யூ.ஆர் (QR) கோடை ஸ்கேன் செய்தால் போதும். இதில் ஹெல்மெட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது சிறப்புச் சலுகையாக 100 ரூபாய் வேலட் (wallet) சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

ttn

இந்த திட்டம் பலருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டுமே உள்ள இந்த திட்டம், மக்களின் வரவேற்பை பொறுத்து அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.