‘மெட்ரோ’வில் இளம்பெண் முன்பு சுய இன்பம் செய்த இளைஞர்: அலேக்காக தூக்கிய காவல்துறை!
இளம் பெண் ஒருவரை பார்த்து சுய இன்பம் செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி : இளம் பெண் ஒருவரை பார்த்து சுய இன்பம் செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி மெட்ரோ ரயிலில் கடந்த 14 ஆம் தேதி பயணம் செய்த இளம்பெண் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ‘நான் எஸ்கலேட்டரில் இருந்து வெளியே வந்தேன். அப்போது ஏதோ தவறு நடப்பது போல தோன்றியது. திரும்பி பார்த்தபோது, இளைஞர் ஒருவர் என்னை பார்த்து கொண்டே சுய இன்பம் செய்து கொண்டிருந்தார். நான் அவனை கன்னத்தில் அறைந்தேன். அவர் என்னை திட்ட தொடங்கினான். அங்கிருந்தவர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.பெண்களின் பாதுகாப்பிற்கு மெட்ரோ தான் சிறந்தது எனக் கூறுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை. இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். பெண்களுக்கு தேவை இலவச பயணம் இல்லை. பாதுகாப்பான பயணம் மட்டும் தான். அரசு இதை உறுதிசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த பதிவை அவர் பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு டேக் செய்திருந்திருந்தார். இந்த பதிவானது வைரலானதை தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக அதிகமான காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
Gurugram: Man arrested on complaint of a woman who alleged that the man flashed and masturbated on her at the Huda City Centre Metro Station on June 14. #Haryana pic.twitter.com/Wu0zStetTC
— ANI (@ANI) June 19, 2019
இந்நிலையில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மெட்ரோ ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 354A , மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.