மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இலவசமாக படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை 2ஆம் சுற்று குலுக்கல்

 

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இலவசமாக படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை 2ஆம் சுற்று குலுக்கல்

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து சிறு பான்மையற்ற நர்சரி மற்றும் துவக்க பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டில் இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கைக்கு இரண்டாம் சுற்று குலுக்கல் நாளை (நவம்பர்.12) நடைபெற உள்ளது.

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இலவசமாக படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை 2ஆம் சுற்று குலுக்கல்

இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை பெறுவதற்கு 12.10.2020 முதல் 7.11.2020 வரையிலான நாட்களில் இணையம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு நாளை குலுக்கல் நடைபெறவிருப்பதாகவும், அதுசமயம் பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிக்கு நாளை காலை 9.30 மணிக்கு வருகை புரிந்து நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளுமாறும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.