மெடிக்கலில் ஊசி போட்டுக்கொண்ட பெண் பரிதாப பலி…நிர்க்கதியாக நிற்கும் நான்கு குழந்தைகள்!

 

மெடிக்கலில்  ஊசி போட்டுக்கொண்ட பெண் பரிதாப பலி…நிர்க்கதியாக நிற்கும் நான்கு குழந்தைகள்!

மெடிக்கல் ஒன்றை நடத்தி வந்த அவர், சிறுசிறு நோய்களுக்கு ஊசி போடுவது, மாதிரி கொடுப்பது என மருத்துவராகவும் இருந்துள்ளார். 

பெரம்பலூர் அருகே மருந்துக்கடைக்காரர் ஊசி போட்டதால், பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்த கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் டி.பார்ம் படித்துள்ளார். இதனால் அதே ஊரில்  மெடிக்கல் ஒன்றை நடத்தி வந்த அவர், சிறுசிறு நோய்களுக்கு ஊசி போடுவது, மாதிரி கொடுப்பது என மருத்துவராகவும் இருந்துள்ளார். 

ttn

இந்நிலையில் தமிழ்செல்வி என்ற 35 வயது பெண் தனது கணவரை இழந்து தனது 4 பிள்ளைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். தமிழ்செல்வி  சளி தொல்லை காரணமாக கதிரவன் மெடிக்கலுக்கு  செல்ல, அவர் தமிழ்செல்வியின் கைநரம்பில் ஊசி போட்டுள்ளார். இதில் சில மணிநேரத்தில் மயங்கி விழுந்த தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

ttn

இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே  கதிரவனை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். 

தற்போது தாயையும் தந்தையையும் இழந்த அவரது நான்கு பிள்ளைகளும் ஆதரவற்று நிற்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.