மெக்சிகோவில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 101 பயணிகள்

 

மெக்சிகோவில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 101 பயணிகள்

மெக்சிகோ: மெக்சிகோவில் அவசரமாக வயலில் தரையிறக்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த 101 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

சிகோவின் துராங்கோ விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் மெக்சிகோ நகரை நோக்கி  விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், திடீரென சுமார் ஆறு கிலோ மீட்டார் தூரத்தில் உள்ள வயல் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வயல் பகுதியில் அவசராமாக தரையிறக்கப்பட்ட போது அந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர், காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தினால் விமானத்தில் பிடித்த தீயும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.