‘மெகா’ குடும்பத்தின் நெருக்கமான ரசிகர் மறைவு… நேரில் அஞ்சலி செய்த சிரஞ்சீவியின் குடும்பத்தினர்!

 

‘மெகா’ குடும்பத்தின் நெருக்கமான  ரசிகர் மறைவு… நேரில் அஞ்சலி செய்த சிரஞ்சீவியின் குடும்பத்தினர்!

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ், மகள் நிஹாரிகா என அனைவரும் டோலிவுட்டில் நடிகர்களாக வலம் வருகிறார்கள். 

தெலுங்கு  சினிமாவில் மிகப் பெரிய அங்கம் வங்கிக்கும் குடும்பம் என்றால் அது சிரஞ்சீவியின் குடும்பம் தான். சிரஞ்சீவி குடும்பத்தில் சிரஞ்சிவீயின் சகோதரர்கள் நாகேந்திர பாபு, பவன் கல்யாண், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ், மகள் நிஹாரிகா என அனைவரும் டோலிவுட்டில் நடிகர்களாக வலம் வருகிறார்கள். 

ttn

சிரஞ்சிவீயின் மனைவி சுரேகா அல்லு ராமலிங்கைய்யா என்ற தெலுங்கு நடிகரின் மகள். சுரேகாவின் சகோதரர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் என்ற மிகப்பெரிய  நிறுவனத்தின் தயாரிப்பாளர்.  இவரது மகன்கள் அல்லு அர்ஜுன், அல்லு சிரீஷ்  இவர்கள் இருவரும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்கள் தான். 

ttn

இந்நிலையில் சிரஞ்சீவியின் மொத்த குடும்பத்துக்கும் மிகப்பெரிய ரசிகராக இருந்துள்ளார் நூர் பாய். சமீபகாலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நூர் பாயை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் சமீபத்தில் மருத்துவமனையில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.  தற்போது அவர் . சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நூர் பாயின்  இறுதிச் சடங்கிற்குச் சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் உடன்  சென்றுள்ளனர். 

ttn

இதுகுறித்து ராம் சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ரசிகர்கள்தான் குடும்பம். எங்கள் குடும்ப உறுப்பினர் நூர் முகமது இல்லாததைக் கண்டிப்பாக உணர்வோம். அவரின் நேர்மறை எண்ணங்கள், உதவும் குணம் இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

ttn

இதுமட்டுமின்றி அல்லு அர்ஜுனின், ’அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் டீசர் வெளியாகியிருந்த நிலையில் நூர் முகமதுவின் இழப்பால் டீசர் வெளியாகவில்லை என்று கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம்  தெரிவித்துள்ளது.