“மூன்று முறை கர்ப்பமாக இருந்தார்” அதிர்ச்சித் தகவல் கூறிய நடிகர்… போலீசில் புகாரளித்த சசிகுமார் பட நடிகை !

 

“மூன்று முறை கர்ப்பமாக இருந்தார்” அதிர்ச்சித் தகவல் கூறிய நடிகர்… போலீசில் புகாரளித்த சசிகுமார் பட நடிகை !

லாவண்யா, தன்னைப் பற்றி தவறான மற்றும் கொச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக நடிகர் சுனிசித் என்பவர் மீது மின்னஞ்சல் மூலம் ஆன்லைன் புகார் ஒன்றை ஹைதராபாத் சைபர் க்ரைமில் பதிவு செய்துள்ளார். சுனிசித் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், லாவண்யா திரிபாதி, தமன்னா பாட்டியா போன்ற பல திரைப்பட நடிகைகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறினார்

நடிகை லாவண்யா திரிபாதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘பிரம்மன்’, ‘மாயவன்’ என இரு படங்களில் நடித்துள்ளார். 

lavanya

லாவண்யா, தன்னைப் பற்றி தவறான மற்றும் கொச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக நடிகர் சுனிசித் என்பவர் மீது மின்னஞ்சல் மூலம் ஆன்லைன் புகார் ஒன்றை ஹைதராபாத் சைபர் க்ரைமில் பதிவு செய்துள்ளார். சுனிசித் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், லாவண்யா திரிபாதி, தமன்னா பாட்டியா போன்ற பல திரைப்பட நடிகைகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறினார். லாவண்யா திரிபாதி அவருடன் உறவு கொண்டிருந்ததால் இதுவரை மூன்று முறை கர்ப்பமாகிவிட்டதாகவும் சுனிசித் கூறினார். சர்ச்சைக்குரிய நடிகராக வலம்வரும் சுனிஸித், “லாவண்யா தன்னை திருமணம் செய்து கொண்டார், ஆனால் பின்னர் பிரிந்துவிட்டார் என்று கூறினார். மேலும் மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

sunisith

இதையறிந்த லாவண்யா திரிபாதி ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் சுனிசித் மீது மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் ஸ்ரீ ராமோஜ் சுனிசித் என்ற நபர் தன்னை திருமணம் செய்து கொண்டதாக பொய்யாகக் கூறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது போலீசார் சுனிசித்தைத் தேடி வருகின்றனர்.