மூன்று பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை!

 

மூன்று பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை!

தந்தை  ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நான்காவதும்  பெண் குழந்தையே பிறந்ததால்  மூன்று பெண் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தந்தை  ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம், ஜுனாகத் மாவட்டம் கம்பாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ரசிக் சோலங்கி. 35 வயதான  இவருக்கு 7, 5, மற்றும் 3  முறையே அஞ்சலி, ரியா, ஜல்பா என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளன.

ttn

இந்நிலையில் ரசிக் சோலங்கியின் மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இம்முறையாவது  ஆண்  குழந்தை பிறக்குமா என்று எதிர்பார்த்திருந்த ரசிக் சோலங்கிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம்  அவருக்கு  நான்காவதாகவும்  பெண் குழந்தையே பிறந்தது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் சோலங்கி மூன்று பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சோலங்கி பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியினாலும் அதிக கடன் சுமையினாலும் இவ்வாறு ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது சோலங்கி மனைவி மருத்துவமனையிலிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.