மூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி: சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
முன்னதாக இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 24 எம்.பி. பிரைமரி சென்சார், 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. மூன்றாவது கேமரா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், செல்ஃபிக்களை எடுக்க 24 எம்.பி. கேமராவுடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபி ஃபோக்கஸ், ப்ரோ லைட்டிங் மோட் மற்றும் ஏ.ஆர். எமோஜி ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) சிறப்பம்சங்கள்:
– 6.0 இன்ச் 1080×2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா
– 5 எம்.பி. மூன்றாவது கேமரா, f/2.2
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– டால்பி அட்மோஸ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
புளு, பிளாக், கோல்டு மற்றும் பின்க் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.29,385 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளில் கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.