மூன்று படுக்கையறையைக் கொண்ட புதிய வீடு: மும்பையை கலக்கும் ‘தனுஷ்’ பட நாயகி!?

 

மூன்று படுக்கையறையைக் கொண்ட புதிய வீடு: மும்பையை கலக்கும் ‘தனுஷ்’ பட நாயகி!?

 நடிகை டாப்ஸி மும்பையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பை:  நடிகை டாப்ஸி மும்பையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் அப்படத்தைத் தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து இவரது படங்கள் தமிழில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் பாலிவுட் பக்கம்  சென்ற டாப்ஸி பேபி, பிங்க் போன்ற படங்களால்  நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது  தட்கா, மிஷன் மங்கள், ஷாந்த் கி ஆங்க் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

tapsee

இந்நிலையில் நடிகை டாப்ஸி மும்பையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த வருடம் மும்பை புறநகர் பகுதியில் மூன்று படுக்கையறையைக் கொண்ட வீடு ஒன்றை வாங்கினார். தற்போது அதே பகுதியில் பல கோடிகள்  செலவிட்டு மற்றொரு வீடு ஒன்றையும் வங்கியுள்ளாராம். இந்த வீட்டிற்கான விளக்குகள் போன்ற அலங்கார பொருட்களை டாப்ஸியின் சகோதரி ஷாகன் ஸ்பெயினிலிருந்து வரவழைத்துள்ளாராம். மேலும்  வீட்டின் அலங்கார வேலைகளை  ஷாகனே  செய்துள்ளார் என்றும் தெரிகிறது. 

vicky

முன்னதாக நடிகை டாப்ஸியும், பாலிவுட் நடிகர் விக்கி கௌசலும்  பொது இடங்களில் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸி, விக்கி கௌசலை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.