மூன்று தலைநகர் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி :பவன் கல்யாண் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.

 

மூன்று தலைநகர் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி :பவன் கல்யாண் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்.

அமராவதியிலிருந்து தலைநகரை  மாற்றுவதை  தடுக்க முயற்சிக்கும் ஜனசேனா கட்சி, டெல்லி மட்டத்தில் அதை தடுக்க திட்டமிடுவதாக  கூறப்படுகிறது. ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் மற்றும் பாஜக தலைவர்கள் வியாழக்கிழமை பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை  சந்தித்தனர். அப்போது ஆந்திராவில் செயல்படுத்தப்படவுள்ள தலைநகர்  திட்டம்  குறித்து அவர்கள் தெரிவித்தனர்.

அமராவதியிலிருந்து தலைநகரை  மாற்றுவதை  தடுக்க முயற்சிக்கும் ஜனசேனா கட்சி, டெல்லி மட்டத்தில் அதை தடுக்க திட்டமிடுவதாக  கூறப்படுகிறது. ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் மற்றும் பாஜக தலைவர்கள் வியாழக்கிழமை பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை  சந்தித்தனர். அப்போது ஆந்திராவில் செயல்படுத்தப்படவுள்ள தலைநகர்  திட்டம்  குறித்து அவர்கள் தெரிவித்தனர்.

pawan kalyan

ஊடகங்களுடன் பேசிய பவன் கல்யாண் மூன்று தலைநகர  பிரச்சினைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது ஒய்.எஸ்.ஆர்.சி.பி எடுத்த ஒருதலைப்பட்ச முடிவு என்றும் கூறினார் .

தங்கள்  திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜன சேனா மற்றும் பாஜக ஆகியவை தலைநகர்  கட்டுமானத்திற்காக நிலங்களை வழங்கிய விவசாயிகளின்  ஒற்றுமையை வெளிப்படுத்த பிப்ரவரி 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு விஜயவாடாவில் உள்ள ததேப்பள்ளியில் இருந்து, கண்காட்சி மைதானம் வரை நீண்ட அணிவகுப்பு நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

pawan-kalyan-01

முன்னதாக புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற பாஜக – ஜனசேனா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  பவன் கல்யாண், கண்ண லட்சுமிநாராயணா, நடேந்த்லா மனோகர், ஜி.வி.எல் நரசிம்மராவ், புரந்தேஷ்வரி போன்ற தலைவர்கள் மாநிலத்தில் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.