மூன்றாவது மனைவியென்றால் தப்பா? – கொந்தளித்த பிரபல நடிகை

 

மூன்றாவது மனைவியென்றால் தப்பா? – கொந்தளித்த பிரபல நடிகை

இவருடைய கணவர் ஷர்துல் பயஸ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் மற்றும் விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் மூன்றாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டீர்களே என்று பலரும் நேஹாவை மறைமுகமாக விமர்சித்து வந்தனர்.

பல பெண்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், நான் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆனவரைத் திருமணம் செய்துகொண்டதைத் தவறு போல பேசி வருகின்றனர் என்று நடிகை நேஹா பென்ட்சே கூறியுள்ளார்.

nosa4

தமிழில் மௌனம் பேசியதே படத்தில் நடித்தவர் நேஹா பென்ட்சே. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துவந்த நேஹா 2017ம் ஆண்டு தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் ஷர்துல் பயஸ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் மற்றும் விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

nosa1

இந்த நிலையில் மூன்றாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டீர்களே என்று பலரும் நேஹாவை மறைமுகமாக விமர்சித்து வந்தனர். இவற்றுக்கு நேஹா பதில் அளித்துள்ளார். 
“உலகத்திலேயே இது போல் எங்கும் நடந்தது இல்லையா… நான் மட்டும்தான் ஒருவருக்கு மூன்றாவது மனைவியாக சென்றேனா… இன்றைக்கு ஒருவர் மூன்று, நான்கு பேரை திருமணம் செய்துகொள்வது எல்லாம் வாடிக்கையாகிவிட்டது. நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதுபோல் பலரும் பேசுகிறார்கள். இன்றைக்கு திருமணத்துக்கு முன்பே கூட பலரும் பலபேருடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். அதை ஒப்பிடுகையில் இதெல்லாம் ஒன்றுமே இல்லை” என்று கூறியுள்ளார்.