மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பிரபல ரவுடி.. படுகொலை செய்த பெண்ணின் அண்ணன்!

 

மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பிரபல ரவுடி.. படுகொலை செய்த பெண்ணின் அண்ணன்!

4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்துடன் சம்பவ இடத்திலேயே  பலியானார்.

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே மானியம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் மீது பல குற்ற சம்பவங்கள் செய்ததாக வழக்குகள் உள்ளன. இவர் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்து கிளம்பிய உதயகுமாரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்துடன் சம்பவ இடத்திலேயே  பலியானார். 

ttn

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உதயகுமார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை குறித்த முதற்கட்ட விசாரணையில், உதயகுமாருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆகி 6 குழந்தைகள் உள்ள நிலையில் அவர் மூன்றாவதாக உறவினர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணிண் அண்ணண் அந்தோர்ஷ், நண்பர்களான   இம்மானுவேல், நவின், நிர்மல் ஆகியோருடன் சென்று உதயகுமாரை கொலை செய்ததாக தெரிகிறது. 

ttt

இவர்கள் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்லும் போது வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 10 சவரன் தங்க சங்கலியை வழிப்பறி செய்தது குறிப்பிடத்தக்கது.