மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பவுலிங் செய்கிறது இந்திய அணி.

 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பவுலிங் செய்கிறது இந்திய அணி.

இந்தியா மற்றும் விண்டீஸ் இரு அணிகளும் மோதி வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில் வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா மற்றும் விண்டீஸ் இரு அணிகளும் மோதி வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில் வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

இன்றைய போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் நவதீப் சைனி உள்ளே எடுத்து வரப்பட்டு இருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள்:

எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (கீப்பர்), சிம்ரான் ஹெட்மியர், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், கீமோ பால், அல்சாரி ஜோசப், கேரி பியர், ஷெல்டன் கோட்ரெல்

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோஹ்லி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி.

indian cricket team