மூன்றாவது அணியை ஆதரிக்க மாட்டோம்: பாலகிருஷ்ணன் அதிரடி

 

மூன்றாவது அணியை ஆதரிக்க மாட்டோம்: பாலகிருஷ்ணன் அதிரடி

பாஜகவுக்கு எதிரான மூன்றாவது அணியை ஆதரிக்கமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை: பாஜகவுக்கு எதிரான மூன்றாவது அணியை ஆதரிக்கமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்படுகிறது. பாஜக – அ.தி.மு.க. அரசுக்கு வருகிற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். பாஜகவுக்கு எதிரான 3-வது அணியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஏனென்றால் அது பாஜக நிறுத்தும் மற்றொரு அணியாகத்தான் இருக்கும்.

மத சார்பற்ற கட்சிகளுக்குதான் எங்கள் ஆதரவு உண்டு. அந்த வகையில் திமுக – காங்கிரஸ் ஒன்றாகபாடுபடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.