மூதாட்டியிடம் 52 பவுன் நகை திருட்டு! ஹோம் நர்ஸ் செய்த அதிர்ச்சியான சம்பவம்!

 

மூதாட்டியிடம் 52 பவுன் நகை திருட்டு! ஹோம் நர்ஸ் செய்த அதிர்ச்சியான சம்பவம்!

கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்தவர் எல்வின் (63). இவருடைய மகனும், மகள்களும் திருமணம் செய்துக் கொண்டு மும்பையில் வேலைப் பார்த்து, அங்கேயே வசித்து வருகிறார்கள். கேரளாவில் தனியாக வசித்து வந்த எல்வின், தனது உடல்நிலை காரணமாகவும், பாதுகாப்புக்காகவும் சூசன் எனும் பெண்மணியை கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே தங்கி கவனித்துக் கொள்ளும் ஹோம் நர்ஸாக வேலைக்கு வைத்துக் கொண்டார்.

கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்தவர் எல்வின் (63). இவருடைய மகனும், மகள்களும் திருமணம் செய்துக் கொண்டு மும்பையில் வேலைப் பார்த்து, அங்கேயே வசித்து வருகிறார்கள். கேரளாவில் தனியாக வசித்து வந்த எல்வின், தனது உடல்நிலை காரணமாகவும், பாதுகாப்புக்காகவும் சூசன் எனும் பெண்மணியை கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே தங்கி கவனித்துக் கொள்ளும் ஹோம் நர்ஸாக வேலைக்கு வைத்துக் கொண்டார். இரண்டாண்டுகளாக ஹோம் நர்ஸ் சூசன் தான் எல்வினை, வீட்டோடு தங்கியிருந்து கவனித்து வந்தார். நன்றாக பழகி, எல்வினின் அன்பையும் சம்பாதித்தார். இந்நிலையில், எல்வின், மும்பையில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்று விட முடிவெடுத்தார். அதனால், சூசனை அழைத்து தனது முடிவை சூசனிடம் தெரிவித்து, இனி வேலைக்கு வரவேண்டாம் என்று க் கூறியிருக்கிறார்.

gold

சூசனும் அதன் பிறகு வழக்கம் போல எல்வினை கவனித்துக் கொண்டு, சிரித்துப் பேசி பிரியா விடைப் பெற்று சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில், மும்பை செல்வதற்காக தான் வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து பேக் செய்வதற்காக அலமாரியைத் திறந்த எல்வினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அலமாரியில் இருந்த 52 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் பணம் போன்றவை எதையும் காணவில்லை.  உடனடியாக இது குறித்து கொட்டாரக்கரை போலீசில் எல்வின் புகாரளித்தார். இதையடுத்து ஹோம் நர்ஸாக வேலைப் பார்த்த சூசனைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், நகைகளையும், பணத்தை திருடியதை சூசன் ஒப்புக் கொண்டார்.

theif

இதையடுத்து அவரிடம் இருந்து 52 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டிலேயே தங்கியிருந்து நன்றாக பழகிய பெண்மணியே இப்படி நகைகளைத் திருடிக் கொண்டு தப்பியோடியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.