‘மூணு வயசையெல்லாம் …அவங்களுக்கு எப்படி மனசு வருது ?-கல்யாண மண்டபத்தில் மூணு வயசு சிறுமி கற்பழிப்பு .
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சிறுமி தனது பெற்றோருடன் வந்திருந்தாள். அவள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தப் பிறகு திடீரென காணாமல் போனாள், ஆனால் அவள் காணாமல் போனதை பெற்றோர்கள் கவனிக்கவில்லை
உத்தரபிரதேசத்தின் மெயின்பூரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தின் குளியலறையில் மூன்று வயது சிறுமி ஒரு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் புதன்கிழமை இரவு மெயின்பூரி மாவட்டத்தின் போகான் பகுதியில் நடந்துள்ளது.
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சிறுமி தனது பெற்றோருடன் வந்திருந்தாள். அவள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தப் பிறகு திடீரென காணாமல் போனாள், ஆனால் அவள் காணாமல் போனதை பெற்றோர்கள் கவனிக்கவில்லை.அப்போது கல்யாணத்துக்கு வந்த ஒரு இளைஞர் அந்த சிறுமியை பாத்ரூமுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு மண்டபத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் .
சிறிது நேரம் கழித்து திருமணத்திற்கு வந்த ஒரு பெண் விருந்தினர் வாஷ்ரூமுக்குச் சென்றபோது, மைனர் சிறுமி தரையில் படுத்துக் கிடப்பதைக் கண்டார். உடனே அவர் சிறுமியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தார் .சிறுமியின் ரத்தப்போக்கு நிலையை கண்ட பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது அவர் நடந்தவற்றை கூறினார் .பிறகு அவர்கள் போலீசில் புகாரளித்தனர் .
பின்னர் போலீசார் மண்டபத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது ஒரு பெண் காவல்துறையினரிடம், ஒரு இளைஞன் வாஷ் ரூமில் இருந்து வெளியே வருவதைக் கண்டதாகக் கூறினார்.
திருமண மண்டபத்திற்குள் எட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக் காட்சிகள் பதியவில்லையென போலீசார் கூறினர் .
மெயின்பூரி காவல்துறை கண்காணிப்பாளர் இப்போது , சிறுமியின் நிலை சீராக உள்ளது என்றும், மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.மேலும் கல்யாண வீடியோ மூலம் சந்தேகப்படும் பலரை போலீசார் விசாரித்து வருகின்றனர்