மூடிட்டு போ : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி

 

மூடிட்டு போ : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி

வைரமுத்து விவகாரத்தில் தன்னை விமர்சித்த நெட்டிசன் ஒருவருக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை: வைரமுத்து விவகாரத்தில் தன்னை விமர்சித்த நெட்டிசன் ஒருவருக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். 

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ‘Me Too’ மூலம் சின்மயி கூறியது  தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என்றும் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் என்றும் வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்திருந்தார். 

வைரமுத்து ஆதரவாளர்கள் சிலர் 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது பேசுவதா? என்று சிலர் சின்மயியை கண்டித்தனர். இந்நிலையில் நெட்டிசன்  ஒருவர் டிவிட்டரில், ‘தீபாவளிக்கு சின்மயி வெடி என்று ஒன்று வந்துள்ளதாம். இப்போது பற்ற வைத்தால் பதினைந்து வருடத்துக்கு அப்புறம்தான் வெடிக்குமாம்’ என்று கேலி செய்து ஒரு பதிவை வெளியிட்டார்.

chinmayi

இதற்குப் பதிலளித்துள்ள சின்மயி, ‘எரிமலை பல வருஷம் கொந்தளிச்சிட்டே இருக்குமாம். ஆனால் வெடிச்சா சர்வ நாசம். மூடிட்டு போ’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.