மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியராகிவிட்டார்: அமைச்சர் துரைக்கண்ணு

 

மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியராகிவிட்டார்: அமைச்சர் துரைக்கண்ணு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல் ஆகிவிட்டார் என அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியர் போல் ஆகிவிட்டார் என அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில், அதிமுக ஆட்சி இன்று கலைந்துவிடும், நாளை திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று மரத்தடி ஜோசியர் போல அடிக்கடி மு.க.ஸ்டாலின் ஆரூடம் சொல்லி வருகிறார். 

மக்களை கவர, சைக்கிளில் பயணம் செய்து பார்த்தார், டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தார். இதில் எதுவுமே பலன் அளிக்கவில்லை என்றதும், இப்போது மரத்தடி ஜோசியர் ஆகிவிட்டார். ஆனால் அவர் சொல்வதெல்லாம் பலிக்காது. ஏனெனில் அவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அதனால் திகார் ஜெயிலுக்கு போவது உறுதி என்றார்.