மு.க.ஸ்டாலினின் ஆட்டத்துக்கு முடிவுகட்டத் துடிக்கும் அமித்ஷா… முகத்திரையை கிழிக்க ப்ளான்..!

 

மு.க.ஸ்டாலினின் ஆட்டத்துக்கு முடிவுகட்டத் துடிக்கும் அமித்ஷா… முகத்திரையை கிழிக்க ப்ளான்..!

2ஜி வழக்கில் விசாரணையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தான் கனிமொழியும், ராசாவும் வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் சூடு பிடிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக வேண்டுமென்றே சில கட்சிகள் இஸ்லாமிய சமூகத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைத்தன்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லாமல் சிந்திக்கக் கூட விடாமல் அப்பாவி மாணவர்களையும் இளைஞர்களையும் போராட்டக் களத்தில் இறக்கிவிட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

stalin

 திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டத்தை நீக்கி அதற்கு எதிராக மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து வந்தனர். திமுகவின் எதிர்ப்புக்குரல் என்பது தமிழகத்திற்கு சிறப்பு சட்டப்பிரிவை நீக்கியது போல் கொந்தளித்து தன்னை பாகிஸ்தான் ஊடகங்களில் பாராட்டும் அளவிற்கு விளம்பரப்படுத்திக் கொள்வது அதேபோல் ஈழத்தமிழர்களை தேசிய குடியுரிமை சட்ட பிரச்சினையில் சிக்க வைத்து விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறது திமுக.

amit shah

இதற்கு அதிமுக, பாமக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் பலத்த பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது நாடாளுமன்றத்தில் அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து இருப்பதால் திமுக தன்னை விளம்பரத்துக்காகவே அடையாளப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது என்று தேசிய அளவில் உள்ள அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பாஜக கோபத்தின் உச்சத்திற்கே திமுகவின் செயல்பாடுகள் சென்றுவிட்டது.

இதன் விளைவாக இந்திய தேசிய கொடி உரிமை சட்டத்திற்கு எதிராக மு க ஸ்டாலின் போராடிக் கொண்டிருக்கும்போதே முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில் மு க ஸ்டாலின் டெல்லிக்கு அழைத்து வர வைக்க அறிக்கை அனுப்பி விட்டது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம். முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில் ஆவணங்களை காட்டாமல் வழக்கறிஞர்களை வைத்து வாதாடி சென்ற திமுக முரசொலி அரங்காவலர் மு க ஸ்டாலின் டெல்லியில் உள்ள பஞ்சமி நிலம் விவகாரம் தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆணைய தலைவர் முருகன் தெரிவித்து இருந்தார்.stalin

தனது கட்சி எம்பி களை வைத்து பாடிக்கொண்டிருக்கும் ஸ்டாலினின்  முகத்திரையை டெல்லியில் வைத்து கிழிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. 2ஜி வழக்கில் விசாரணையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தான் கனிமொழியும், ராசாவும் வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் சூடு பிடிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன