முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்! எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

 

முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்! எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பொலிட்டிகல் செகரட்டரியாக இருப்பவர் எம்.பி ரேணுகாச்சாரி.கடந்த பிஜேபி அரசில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அவரது சொந்த ஊரான தாவண்கரே நகரில் நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் ரேணுகாச்சாரி பேசினார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பொலிட்டிகல் செகரட்டரியாக இருப்பவர் எம்.பி ரேணுகாச்சாரி.கடந்த பிஜேபி அரசில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அவரது சொந்த ஊரான தாவண்கரே நகரில் நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் ரேணுகாச்சாரி பேசினார்.

mp-renukacharya-01

குடியுரிமைச் சட்ட ஆதரவு ஊர்வலத்துக்கு வரும்படி அவர்களை நான் அழைத்தும் யாரும் வரவில்லை.நானும் எனது கட்சியும் அவர்களை சமமாக நடத்தவில்லை என்று கருதினால் அப்படியே போய்விடுங்கள்.நானும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இந்துக்களுக்கும்,என் தொகுதி மேம்பாட்டுக்கும் செலவு செய்து கொள்கிறேன் என்று பேசினார்.அத்துடன்,இஸ்லாமியர் மசூதிகளில் கத்திகள்,சோடா பாட்டில்கள்,வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களை சேகரித்து வைக்கிறார்கள். அங்கே பிரார்த்தனை நடப்பதில்லை , ஆயுத பதுக்கல்தான் நடக்கிறது. அவர்களது மதகுருக்கள் இவர்களுக்கு போதனை செய்வதில்லை. மற்றவர்களை கொல்ல ஃபத்வாதான் விதிக்கிறார்கள் என்று பேசி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார். 

அதே சமையம்,கர்நாடக மாநில பிஜேபி செய்தித் தொடர்பாளர்,எஸ்.பிரகாஷ் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கும்போது,திரு ரேணுகாச்சாரி பேசியிருப்பது அவரது சொந்தக் கருத்து. அதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.அவர் பேசியதற்கு பிஜேபி பொறுப்பேற்காது . அதற்கு முழுக்க,முழுக்க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சாரி மட்டுமே பொறுப்பாவார் என்று தெரிவித்து இருக்கிறார்.