முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; பிரதமருக்கு முதல்வர் கடிதம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்காக ஆய்வறிக்கை தயார் செய்ய கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதில் எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்த வேண்டும்.
ஏற்கனவே வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கேரள அரசின் கோரிக்கையை எந்தவித பரிசீலனையும் இல்லாமல் நிராகரிக்க வேண்டும். சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும் என கூறியுள்ளார்.