முற்றிய மோதல்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்! தி.நகரில் பரபரப்பு

 

முற்றிய மோதல்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்! தி.நகரில் பரபரப்பு

பொதுக்குழுவை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி தயாரிப்பாளர்களே, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பூட்டு போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: பொதுக்குழுவை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி தயாரிப்பாளர்களே, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பூட்டு போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் பல விடயங்களில் விஷால் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

vishal

அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல், சென்னை தி.நகரில் அமைந்துள்ள சங்க அலுவலகம் முன்பு கூடிய டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், விஷாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அந்த சமயத்தில் விஷால் அங்கு இல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் சங்கத்தின் செயலாளர் கதிரேசன் ஈடுபட்டார். ஆனால், அது பலனளிக்கவில்லை.

producer

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அறைகளுக்கு பூட்டு போட்டதோடு மட்டுமின்றி, விஷால் உடனடியாக வரவேண்டும் என்று தொடர்ந்து போராடினார்கள். சங்கத்துக்கு பூட்டு போட்டு சாவியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.